சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

Update: 2022-07-15 09:34 GMT

வெள்ளகோவிலில் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் இறைச்சி கழிவுகளையும், கோழி கழிவுகளையும் கொட்டி விடுகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் ஈ ெதால்லை மட்டுமல்ல பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்த அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்