சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மின்வாரியத்தின் பின்புறத்தில் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.