கோவில் குளத்தில் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-14 10:00 GMT
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலுக்கு சொந்தமாக குளம் ஒன்று கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு வெண்ணாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த கால்வாய் தூர்ந்து போய் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது. இதனால் மழை நீர் மூலமாகவே குளத்தில் தேங்கிய தண்ணீரில் சிலர் குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்