கடும் துர்நாற்றம்

Update: 2022-07-14 08:33 GMT

காரமடை நகராட்சி 14-வது, 16-வது வார்டுக்கு உட்பட்டு சமயபுரம், சத்யா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு தூய்மை பணியாளர்கள் வீடு வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரித்த குப்பைகளை தோலாம்பாளையம் செல்லும் ெரயில்வே கேட் பகுதியில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்