குப்பைக்கு தீ வைப்பதால் பொதுமக்கள்அவதி

Update: 2022-09-09 10:16 GMT

தாராபுரம் 3-வது வார்டு சித்ராவுத்தான்பாளையம் மேற்கு தெரு பகுதியில் சமுதாய கூடம் அமைந்துள்ளது. இந்த சமுதாய கூடத்தில் குப்பைகளை கொட்டி அதிகாலையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் தீ வைக்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பல முறை கூறியும் தீ வைத்து எரிப்பதை நிறுத்தவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?


மேலும் செய்திகள்