நோய்பரப்பும் காய்கறி மார்க்கெட் கழிவுகள்

Update: 2022-09-06 15:18 GMT
பெரம்பலூரில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகள் கிளை சிறைச்சாலை மார்க்கெட் இடையே உள்ள சந்து பகுதியில் தினந்தோறும் கொட்டப்படுகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அகற்றி தூய்மை செய்யாததால் தற்போது பெய்துள்ள மழை காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் போக்குவரத்துக்கு தடையாகவும் உள்ளது.நோய் பரப்பும் நிலையில் உள்ள தினசரி மார்க்கெட் காய்கறி கழிவுகளை நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்