ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரத்தில் குப்பைகளை ெகாட்டாமல் தடுக்கவும், குப்பைகளை முறையாக அள்ளவும் நடவடிக்கை வேண்டும்.