குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-03 14:41 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புதூரில் முப்பிடாதியம்மன் கோவில் எதிரே முகவூர் செல்லும் சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. அருகில் சுகாதார வளாக வசதி இருந்தும் அதை பயன்படுத்தாமல் சிலர் இயற்கை உபாதைகளை  திறந்த வெளியில் பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும்  வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்