கீரப்பாளையம் ஒன்றியம் இடையன்பால்சொரி கிராமத்தில் சில மாதங்களாக துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க இடையன்பால்சொரி கிராமத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.