சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகள்

Update: 2022-09-02 14:25 GMT
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியில் மளிகை, காய்கறி, பேக்கரிகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளையும், அழுகிய காய்களையும், கோழிக்கடைகளில் உள்ள கோழி கழிவுகளையும் , மருத்துவமனையில் உள்ள மருத்துவக்கழிகளையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து தார்சாலை ஓரத்தில் போட்டு செல்கின்றனர். இதனால் சாலையோரத்தில் மலைப்போல் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களை நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்