குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-01 13:03 GMT

வால்பாறை மெயின் ரோட்டில் ரங்கசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்