குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-30 12:25 GMT

கரூர் மாவட்டம், நடையனூர்அருகே இளங்கோ நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தார்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டாமல் அதன் அருகில் கீழே கொட்டி வருகின்றனர். மேலும், குப்பைத் தொட்டியின் மூடியை திறந்து வைத்துள்ளதால் தொடர் மழையின் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்