குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் குப்பை தொட்டி வைத்தும் பொதுமக்கள் அதில் குப்பைகளை போடாமல் வெளியிலேயே கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை 3 நாட்களுக்கு ஒருமுறையாவது அள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தினேஷ், திருப்பூர்.
70106 37156