குப்பைக்கூளமாக மாறிய கால்வாய்

Update: 2022-07-10 11:29 GMT

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜார் வழியாக மணிமுத்தாறு பாசன கால்வாய் கடந்து செல்கிறது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் கால்வாய் கரையில் ஆக்கிரமிப்புகளும் பெருகி விட்டது. எனவே குப்பைக்கூளமாக மாறிய கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வாருவதுடன், அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். மேலும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-மாரிமுத்து, பெருமாள்நகர்.

மேலும் செய்திகள்