விருதுநகரில் கவுசிகமா நதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு அகற்றப்படாமலேயே கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக ஆற்றுப்பாலம், ஆனைக்குழாய் தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமலேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே கவுசிகமா நதியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.