சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-28 12:42 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் கடைகளில் இருந்து வாங்கி வரும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு அந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதியில் உள்ள தார் சாலை ஓரத்தில் பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்