திருச்சி வார்னஸ் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. காற்று வீசும்போது குப்பைகள் பறந்து சாலைக்கு வந்து விடுகின்றன. மேலும் மழைக்காலமாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகள் மட்டுமின்றி நகர் முழுவதும் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.