மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலில் இரவு நேரங்களில் பலர் கூடுவார்கள். சிறந்த பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடமாக தெப்பக்குளம் விளங்கி வரும் நிலையில் மாலைநேர கடைகளில் உணவு பொருட்களை வாங்கி விட்டு குப்பைகளை குளத்தின் ஓரத்தில் போட்டு செல்கிறார்கள். இதனால் குளமானது மாசடைந்து வருகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகளை போட குப்பைத்தொட்டியினை அதிகாரிகள் அமைக்க வேண்டும்.