கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதால் அவர்கள் பயத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இப்பகுதியில் உள்ள கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து குதறுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.