பொதுமக்கள் அவதி

Update: 2025-10-05 13:05 GMT

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சிலர் ஆக்கிரமித்து அவரவர் வசதிக்கேற்ப திருப்பி வைத்துள்ளனர். இதனால் களரம்பட்டி மெயின் சாலை பகுதியில் ஆங்காங்கே இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை அவ்வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்