‘தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2024-05-19 16:18 GMT

மோகனூர் தாலுகா வளையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் சரி செய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் குழி மீண்டும் மூடப்படவில்லை. இதனால் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளதாக ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த குடிநீர் குழாயை சரி செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய ‘தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

-பிரபாகரன் குரும்பப்பட்டி.

மேலும் செய்திகள்