வாய்க்காலில் விரிசல்

Update: 2022-08-09 15:35 GMT

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் இருந்து எதிரே உள்ள காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் புகளூரான் வாய்க்கால் உள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த வாய்க்காலின் இடது மண் கரையில் புதிதாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாய்க்காலில் மண் சரி ஏற்படுவதுடன், அது உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் சூழ்நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் வாய்காலில் ஏற்பட்டு உள்ள விரிசலை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்