பாலத்தில் குழி

Update: 2022-08-08 07:33 GMT

சென்னிமலை பேரூராட்சி, கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அக்கரையாம்பாளையம் நால் ரோட்டில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வந்ததால் பாலம் பழுதாகி விரிசல் அடைந்து குழி ஏற்பட்டு விட்டது. இதனால் அந்த ரோடு வழியாக வாகனங்கள் ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குழி விழுந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதற்கு வசதியாக, குழி உள்ள இடத்தில் மரக்கிளைகளை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடையாளமாக வைத்து உள்ளனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் பாலத்தில் ஏற்பட்டு உள்ள குழியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்