சென்னை சிந்தாதிரிப்பேட்டை சுவாமி பண்டரம் தெருவில் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கழிவு நீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதனால் தெருவில் கழிவுநீர் கசிவதும், சாலையில் தேங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.