செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் முத்துவேல் நகர் 10-வது தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடி இல்லாமல் பல நாட்களாக இருக்கிறது. இந்த இடத்துக்கு அருகில் தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் பகுதியும் உள்ளது. எனவே பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.