நூலகம் செயல்படுமா?

Update: 2023-02-22 14:46 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகே கிளை நூலகம் இது வரை செயல்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல நூலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை செயல்பட வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்