செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஆத்தூரில் உள்ள ஏரியின் மதகுபாலம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே தண்ணீர் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.