தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரியகடைத்தெரு சாலையில் நகராட்சி தொடக்கப்பள்ளி வாசலில் பயனற்ற நிலையில் அடிபம்பு உள்ளது. இது போக்குவரத்துக்கு பெரும் இடையூராக உள்ளது. இவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கைபம்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் , பட்டுக்கோட்டை