செங்கல்பட்டு மாவட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் நடந்து வரும் மேம்பால பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு சுமார் 20 அடிக்கு மேல் பள்ளம் உள்ளது. பள்ளம் முழுவதும் நீர் நிரம்பி இருப்பதால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும்.