செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ரங்காநகர் பகுதியில் மின்சார இணைப்பிற்காக மின்சார கேபிள்களை பதித்துள்ளனர். இந்த மின்சார கேபிள்கள் கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று வருகிறது. இதனால் மழை காலங்களில் மின் கசிவு ஏற்படுமோ என்று அந்த பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். இது குறித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?