செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் 6 வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை. எனவே அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.