தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் செல்லம் பட்டி கிராமத்திலிருந்து வடக்கூர் செல்லும் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகத்தில் முட்கள் குத்தி நிலை தடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், செல்லம்பட்டி