செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் வருகிறார்கள். இங்கு உட்கார இடமின்றி பெரும்பாலானோர் சாலையின் ஓரத்தில் நிற்கின்றனர். மேலும் தங்குமிடம், கழிப்பறை, உள்ளிட்ட வசதிகள் இருந்தும் அவை கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கின்றார்கள். இவைகளை பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக வழங்க பாஸ்போர்ட் சேவை மையம் முன்வர வேண்டும்.