காட்சி பொருளான கண்காணிப்பு கேமரா

Update: 2022-08-18 12:05 GMT
குஜிலியம்பாறை போலீஸ் நிலையம் சார்பில் குஜிலியம்பாறை கடைவீதி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த கண்காணிப்பு கேமரா பல மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல் உடைந்து கீழே தொங்கி கொண்டு இருக்கிறது. குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பயன்பாட்டில் இல்லாமல் தொங்கி கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்