தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது. இதனால் கட்டிடம் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தெக்கூர்.