செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு நோக்கி செல்லும் வழியில் காயரம்பேடு கூட்ரோடு அருகே உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யவே சிரமமாக இருக்கிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.