செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் தாம்பரம், கோயம்பேடு, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்பட பல்வேறு ஊர்களுக்கு மாநகர பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே நுழைந்து திரும்பும் இடத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் மாநகர பஸ்கள் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?