திறந்தவெளி மது அருந்தும் கூடமா?

Update: 2022-08-12 17:08 GMT


உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பத்திர பதிவு அலுவலகம் அருகே ஏராளமானோர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள்.மேலும் மது பிரியர்கள் போதையில் பாட்டில்களை உடைத்து விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த வெளியில் மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்