மோசமான நிலையில் மின் கம்பம்

Update: 2022-08-12 14:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாணிக்குப்பம் கிராமம் கெங்கை அம்மன் கோயில் அருகே இருக்கும் மின் கம்பம் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. மேலும் மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருப்பதால் பொது மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் அச்சம் போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்