மாடுகள் தொல்லை

Update: 2022-08-11 15:10 GMT


தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தமிழ்பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி போன்ற பகுதிகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துர்கா, சிந்தாமணி.

மேலும் செய்திகள்