செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பள்ளி பேருந்து நிறுத்தம் ஸ்ரீ ஊத்து காட்டம்மன் கோவில் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே அமைந்துள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்துவிடும் நிலை இருப்பதால் விரைவில் சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மின்சார வாரியம் கவனிக்குமா?