பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-08-09 15:35 GMT

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாற்று ரோடு அமைக்கப்பட்டு அதில் ஜல்லி கற்கள் போடப்பட்டு பணி நடந்து வருகிறது. ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும்போது அதன் சக்கரத்தில் பட்டு ஜல்லி கற்கள் தெறித்து வந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதன்காரணமாக பலர் காயம் அடைந்து உள்ளனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு