காட்டாங்கொளத்தூர்செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டி புண்ணியம் ஊராட்சியில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரி தற்போது பாசிகள் சூழ்ந்தும், கழிவுநீர் கலந்தும் அசுத்தமாக காட்சி தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் இந்த ஏரி மீதும் கவனம் செலுத்தி தூர்வாரி பாதுகாக்க வேண்டும்.