தஞ்சை அருகே வடவாற்றுக்கரையோரம் உள்ள கிராமம் பிராந்தை. இந்த ஊருக்குள் நுழையும் இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஊர் பெயர் அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஒரு பலகையில் 'பிராந்தை'என்று உள்ளது. அதேஇடத்தில் மற்றொரு பலகையில் 'பிரந்தை'என்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பிழையை திருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.