சித்தாமூர் அருகே, போந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தத்தில், மின்விசை பம்ப் குடிநீர் தொட்டி, ஊரக வளர்ச்சி துறை சார்பில் கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத காரணத்தால், மின்விசை பம்ப் மோட்டார் பழுதடைந்து, குடிநீர் தொட்டியானது வெறும் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. இதனால் கிராமத்தினர் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தொட்டியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.