செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சொந்த இரு சக்கர வாகனங்களில் அவரவர் பணிபுரியும் துறை குறித்து அதாவது வருவாய்துறை, மின்வாரியம், சுகாதார துறை, உள்ளாட்சி என பல்வேறு துறைகள் குறித்த பெயர்களை தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். இவை அவர்களுது சொந்த விருப்பம். ஆனால் அரசு முத்திரையையும் ஒட்டி சொந்த வாகனத்தை அரசு வாகனம் போல் காட்டிக்கொள்கின்றனர். இதுபோல கார் வைத்திருப்பவர்கள் நம்பர் பிளேட்டில் ஆங்கிலத்தில் 'ஜி' என்றும் தமிழில் 'அ' என்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டிக் கொள்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?