செங்கல்பட்டு மாவட்டம். காட்டாங்கொளத்தூர் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியை சுற்றி திருக்கச்சூர், செட்டி புண்ணியம், வடகால், அஞ்சூர், தென்மேல்பாக்கம், கொண்ட மங்களம், குண்ணவாக்கம், வீராபுரம், உள்ளிட்ட ஏராளனமான ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகர் போலிஸ் நிலையத்திற்கு சென்று தான் புகார் கொடுக்க வேண்டும். பொதுமக்களின் சிரமத்தை போக்கவும் இப்பகுதிகளில் அன்றாடம் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்பு