செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் பஜார் வீதியில் உள்ள நடைபாதையின் இரு புறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. நடைபாதையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்தும், இந்த பிரச்சினை குறைந்தபாடில்லை. போக்குவரத்து துறை கவனித்து நடவடிக்கை எடுக்குமா?