பொதுமக்கள் வேண்டுகோள்

Update: 2022-08-04 14:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் (தடம் எண்- 79) அரசு பஸ் வண்டலூரில் உள்ள மேம்பாலத்தில் மட்டும் நின்று செல்கிறது. மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் மிகவும் அவஸ்தைக்குள்ளாகிறார்கள். மேலும் ஆபத்தான வகையில் மேம்பாலத்தின் மீது நின்று பஸ் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே காஞ்சீபுரம் செல்லும் பஸ்கள் வண்டலூர்-வாலாஜாபாத் பாதையில் உள்ள வண்டலூர் மேம்பாலம் இறக்கத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்