செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் ஏரிக்கரை புறநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற் குடை இல்லாததால் பயணிகள் சாலையில் இருந்து பஸ் ஏறும் சூழல் அமைகிறது. இதனால் பயணிகள் மற்றும் பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.